திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் எ.வ.வேலு வெற்றி பெற்றுள்ளார்.
தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 72.81 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் 3 மணி நிலவரப்படி, திமுக கூட்டணி 148 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 85 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.
இந்நிலையில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் எ.வ.வேலு, 80161 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தணிகைவேலை விட 59 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.







