கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், பரமக்குடி அரசு மருத்துவமனையில் ட்ரோன் கருவி மூலம், கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு மருத்துவமனையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 300க்கும் மேற்பட்டோர், சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், தொற்று வேகமாக பரவி வருவதால், அதனை கட்டுப்படுத்தும் விதமாக, பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, பரமக்குடி அரசு மருத்துவமனையில், ட்ரோன் கருவி மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. நாடாளுமன்ற திமுக உறுப்பினர் நவாஸ்கனி ஏற்பாட்டில், மருத்துவமனை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.







