முக்கியச் செய்திகள்செய்திகள்

BIGG BOSS 7-ல் இருந்து வெளியேறிய பூர்ணிமாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிக் பாஸில் இருந்து வெளியேறிய பூர்ணிமா, அந்நிகழ்ச்சியின் மூலம் பெற்ற மொத்த சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

2023 – ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி தொடங்கிய இந்த பிக்பாஸ் சீசன், 97 நாள்களை கடந்து இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து ஏழு சீசன்களாக தொகுத்து வழங்குகிறார். மொத்தம் 23 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த சீசனில், விஷ்ணு, அர்சனா, தினேஷ், மணிசந்திரா, மாயா, விசித்ரா, விஜய் ஆகிய 8 பேரை தவிர பிற போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

‘டிக்கெட் டூ பைனல்’ டாஸ்கில் வெற்றி பெற்ற விஷ்ணுவை தவிர மற்ற 7 போட்டியாளர்களும் இந்த வார நாமினேஷனில் உள்ளனர். இந்நிகழ்ச்சியில் வழக்கம்போல் 14-வது வாரத்தில் வைக்கப்படும் பணப்பெட்டி வைக்கப்படும். பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் 8 போட்டியாளர்களில் யாராவது எடுக்க விரும்பினால் பணப்பெட்டியில் இருக்கும் தொகையை எடுத்துக் கொண்டு வெளியேறலாம். பூர்ணிமா ரவி ரவி ரூ.16 லட்சம் கொண்ட பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு சென்றார்.

இந்நிலையில், இவர் 90 நாள்களுக்கு மேல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்ததால் ரூ.14 லட்சம் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும், இவர் ரூ.16 லட்சம் கொண்ட பணப்பெட்டியையும் எடுத்துச் சென்றார். மொத்தமாக இந்நிகழ்ச்சியின் மூலம் பூர்ணிமா ரூ.30 லட்சம் சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

“18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை தான் கடைசி!” – தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி!

Web Editor

அந்தமான் கடல் பகுதியில் இன்று மாலை உருவாகும் “மோக்கா” புயல்

Web Editor

லியோ LCUல் வருமா?… வராதா?… அமைச்சர் உதயநிதியின் ட்வீட்டால் ரசிகர்கள் அதிர்ச்சி!

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading