சென்னை ஆவின் தலைமையகத்தின் விற்பனை மேலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை நந்தனம் ஆவின் தலைமையகத்தில் விற்பனை மேலாளராக புகழேந்தி பணியாற்றி வந்துள்ளார். இவர் பணிக்காலத்தில் நிதியிழப்பை ஏற்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். துறை ரீதியான தணிக்கை தொடர்வதாகவும், நிதியிழப்பு மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆவின் பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மைச் செய்தி: ‘கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் போராட்டம்’
அண்மையில், மதுரை மண்டல பால்வளத்துறை துணை ஆணையர் கிறிஸ்துதாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஓர் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் சூழ்நிலையில், அதிகாரிகளின் பணியிடை நீக்கம், பணி மாற்றம் அரசு அதிகாரிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.