35.3 C
Chennai
June 16, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் போராட்டம்

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர் செல்வதற்கு போதிய பேருந்துகள் இயக்கப்படாததைக் கண்டித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இரவு நேரத்தில் தென் மாவட்டங்களுக்கு செல்ல பேருந்துகள் முறையாக இயக்கப்படுவது இல்லை என கூறப்படுகிறது. இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், நேற்று மாதத்தின் முதல் நாள் என்பதாலும் சுப முகூர்த்த தினம் என்பதாலும், மக்கள் அதிக அளவில் கூடினர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அண்மைச் செய்தி: ‘கல்விக்கான சர்வதேச செயலி – கங்குலி தொடக்கம்’

அதன் ஒருபகுதியாக தென்மாவட்டங்களுக்கு செல்வதற்காக ஏராளமான பொதுமக்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு நேற்று வருகை தந்தனர். ஆனால், நேற்று மாலை முதல் இரவு 10 மணி வரையில் சாதாரண கட்டண பேருந்துகளைவிட சொகுசு பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

அதனைத்தொடர்ந்து திடீரென ஒன்றுகூடிய பொதுமக்கள் பேருந்துகளை சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து சாதாரண கட்டண பேருந்துகள் இயக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மக்கள் மறியலை கைவிட்டு தங்களின் பயணத்தை தொடர்ந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading