முக்கியச் செய்திகள்இந்தியாதமிழகம்

யஷ்வந்த் சின்ஹாவுக்கு எடப்பாடி பழனிசாமியிடம் ராகுல் ஆதரவு கோரினாரா?- காங்கிரஸ் விளக்கம்

அதிமுகவின் எடப்பாடி பழனிசாமியிடம் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவளிக்குமாறு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கோரவில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் எதிர்க்கட்சி குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவளிக்குமாறு ராகுல் காந்தி கேட்டதாக ஆங்கில ஊடகம் ஒன்றில் செய்தி வெளியானது.

இது முற்றிலும் தவறான செய்தி. ராகுல் காந்தி, எடப்பாடி பழனிசாமிக்கு போனில் அழைத்து பேசி இதுபோன்று எதுவும் கேட்கவில்லை. தமிழகத்தில் திமுகவுடன் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஸ்திரமான நிலையில் உள்ளது. எங்கள் கூட்டணியை பலவீனப்படுத்தும் எந்தவொரு முயற்சியையும் நாங்கள் உறுதியாக இருந்து எதிர்ப்போம் என்று அந்த அறிக்கையில் ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரெளபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா நிறுத்தப்பட்டுள்ளார்.

யஷ்வந்த் சின்ஹா சமீபத்தில் சென்னை வந்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் தனக்கு ஆதரவு அளிக்குமாறு கோரினார்.

இதேபோல், திரெளபதி முர்முவும் சென்னைக்கு வந்து அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரிடம் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு ஆதரவு கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

போதையில் மயங்கிய நிலையில் கிடந்த மாணவிகள்

EZHILARASAN D

இந்தியாவில் ஒரே நாளில் 4 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு..!

Web Editor

திருவண்ணாமலையில் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி சிலை வைக்க தடை

Arivazhagan Chinnasamy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading