ட்ரோன்கள் மூலம் ரத்த பைகள் விநியோகம் – டெல்லியில் சோதனை முயற்சி வெற்றி!

டெல்லியில் ரத்த பைகளை ட்ரோன்கள் மூலம் விநியோகம் செய்வதற்கான சோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளது. கொரோனா தொற்று வேகமெடுத்தபோது வளர்ச்சி பெறாத ஊர்களுக்கு தடுப்பூசிகளை விநியோகிப்பதற்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) மற்றும்…

டெல்லியில் ரத்த பைகளை ட்ரோன்கள் மூலம் விநியோகம் செய்வதற்கான சோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளது.

கொரோனா தொற்று வேகமெடுத்தபோது வளர்ச்சி பெறாத ஊர்களுக்கு தடுப்பூசிகளை விநியோகிப்பதற்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) மற்றும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் ’ஐ-ட்ரோன்கள்’ முதன்முதலாக பயன்படுத்தப்பட்டன. இந்த முயற்சி வெற்றியை கொடுத்த நிலையில், அதனை விரிவுபடுத்தும் நோக்கில், டெல்லியில் இன்று ‘ஐ-ட்ரோன்கள்’ மூலம் ரத்தப் பைகளை விநியோகம் செய்வதற்கான சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

ட்ரோன்கள் மூலம் மருந்துகள் மற்றும் ரத்தப் பைகள் கொண்டு செல்லப்படுவதால் ஏதேனும் சேதம் ஏற்படுமா, வெப்பநிலைக்கு ஏற்ப அவற்றின் தன்மை மாறுமா என்பது குறித்து பரிசோதனை செய்யப்பட்டது. தொடக்க சோதனையின்போது, ஜிஐஎம்எஸ் மற்றும் எல்ஹெச்எம்சி-யிலிருந்து 10 யூனிட் ரத்தம் எடுத்துச் செல்லப்பட்டது. இது வழக்கமான போக்குவரத்து முறையுடன் ஒப்பிடப்பட்டது.

இதையும் படியுங்கள் : பிரபல கே-பாப் இசைக்குழுவில் இருந்து ராப் பாடகர் லூகாஸ் விலகல் – ரசிகர்கள் அதிர்ச்சி!!

இதில் ரத்த பைகளுக்கு எந்த சேதமும் ஏற்படாததால் சோதனை முயற்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ரத்த பைகளை விநியோகிப்பதற்கும், மற்ற மருத்துவ பணிகளுக்காகவும் ஐ-ட்ரோன்கள் பயன்படுத்தப்படும் என்று ஐசிஎம்ஆர் இயக்குநர் ஜெனரல் ராஜீவ்பால் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.