32.5 C
Chennai
April 25, 2024
செய்திகள்

குவைத்தில் இருக்கும் தாயை மீட்க மகள் கோரிக்கை

குவைத் நாட்டுக்கு வேலைக்குச் சென்றுள்ள தமது தாய் கொடுமைப்படுத்தப்படுவதாகவும், அவரை மீட்டுத் தர வேண்டும் என்றும் கோரி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சிறுமி ஒருவர் தமது பாட்டியுடன் வந்து மனு அளித்துள்ளார்.

காரைக்குடி அருகே உள்ள வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா. இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட நிலையில், குடும்ப வறுமை காரணமாக, தமது ஒரே மகளை, வயது முதிர்ந்த தமது தாயாரின் பராமரிப்பில் விட்டுவிட்டு, உறவினர்கள் மூலம் 4 ஆண்டுகளுக்கு குவைத் நாட்டுக்கு வீட்டு வேலைக்காக சென்றுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்தநிலையில், தொலைபேசி மூலம் தமது உறவினர்களை தொடர்பு கொண்ட சித்ரா, வீட்டு உரிமையாளர்கள் தம்மை கொடுமைப்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, சிறுமி கீர்த்தனா, தமது தாயை மீட்க வேண்டும் என உறவினர்களை நாடியுள்ளார். ஆனால், எந்த முயற்சியும் பலன் தராத நிலையில், வயது முதிர்த்த தமது பாட்டியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சிறுமி, தமது தாயாரை மீட்டுத் தரக்கோரி மனு அளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading