தமிழ்நாட்டில் தொடர்ந்து குறையும் தொற்று: இன்று 7427 பேருக்கு பாதிப்பு!

தமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வருகிறது. இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில்,…

தமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வருகிறது. இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் 7,427 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. .

தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 829 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 7,427 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்து 29 ஆயிரத்து 924 ஆக அதிகரித்துள்ளது. தொற்றில் இருந்து 15 ஆயிரத்து 281 பேர் குணமடைந்துள்ளனர்.

இதுவரை 23 லட்சத்து 37 ஆயிரத்து 209 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக, சிகிச்சை பெற்று வந்தவர்களில், 189 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆயிரத்து 386 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் புதிதாக 439 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 25 பேர் உயிரிழந்துள்ளனர். 387 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஈரோட்டில் 795 பேருக்கும் திருப்பூரில் 458 பேருக்கும் சேலத்தில் 511 பேருக்கும் கோவையில் 891 பேருக்கும் புதிதாகத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 37 பேருக்கு கொரோனா தினசரி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.