சீனாவில் மகளைக் கடித்ததால் ஆத்திரமடைந்த தந்தை, பழிவாங்குவதற்காக அதனைக் கடித்துத் தின்றுள்ளார். கண் மண் தெரியாத பாசத்தால் பீடிக்கப்பட்ட தந்தை, தற்போது உடல் நலன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தந்தை – மகள் பாசம் உன்னதமானது. மகளின் கண்ணில் சிறு தூசு பட்டால் கூட துடித்துவிடும் தந்தையர்கள் ஏராளம். குழந்தையைக் கொசு கடித்தாலும் துடித்துவிடும் தந்தைகள் உண்டு. அந்த கொசுவைப் பிடித்து அடித்து கொன்றால் தான் அவர்களுக்கு தூக்கம் வரும். அப்படி ஒரு “அதீத” பாசமுள்ள தந்தை சீனாவில் இப்போது செய்தியாக மாறி இருக்கிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சீனாவின் கடற்கரை நகரான ஹாங்சூ பகுதியில் வசித்து வருகிறார் லூ. 39 வயதான அவர், தனது மகளுடன் சிறு கால்வாயைக் கடந்துள்ளார். அப்போது அதில் இருந்த நண்டு ஒன்று அவரது மகளைக் கடித்துவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த லூ, நண்டைப் பழிவாங்க வேண்டும் என்று துடித்து, அதனைப் பிடித்து, அப்படியே உயிரோடு மகள் கண் எதிரிலேயே கடித்துத் தின்றுவிட்டார். இது மகள் மீதான அவருடைய பாசத்தை வெளிப்படுத்துவதாக இருந்தாலும், அதனால் அவருக்கு ஏற்பட்ட விபரீதம் என்பது சில மாதங்களுக்கு பிறகு தான் தெரிய வந்தது.
நண்டை கடித்துத் தின்ற சில மாதங்களுக்கு பிறகு, லூவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இது தொடர்பாக அருகில் உள்ள மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். லூவைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்று தெரியாமல் தவித்தனர். உடலுக்கு ஒவ்வாத பொருளை சாப்பீட்டீர்களா என்று மருத்துவர்கள் கேட்டதற்கு இல்லை என்று கூறிவிட்டார். அதீத பாசத்தால், நண்டை கடித்துத் தின்றது அவருக்கு மறந்துவிட்டது.
காரணம் புரியாமல் தவித்த மருத்துவர்களுக்கு, லூவின் மனைவி தான் விடை அளித்தார். 2 மாதங்களுக்கு முன்பு , மகளைக் கடித்த நண்டை பழிவாங்க, உயிரோடு அதனை கடித்துத் தின்றதை கூறினார். உடல்நலக் குறைவுக்கு அது ஒரு காரணமாக இருக்குமா என்று மருத்துவர்களிடம் கேட்டுள்ளார். உடனடியாக பரிசோதனையில் இறங்கிய மருத்துவர்கள், நண்டில் ஒட்டுண்ணியால் உடல் உலக்குறைவு ஏற்பட்டிருக்கலாம் என்று கண்டறிந்து அவருக்கு தீவிர சிகிச்சையைத் தொடங்கி உள்ளனர்.
மகளைக் கடித்த நண்டை உயிரோடு கடித்துத் தின்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தந்தைதான் இப்போது உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறார்.