வாழைப்பழம் தர மறுத்த இளைஞரை பசுமாடு ஒன்று முட்டித் தூக்கி வீசும் வீடியோ வைரலாகி வருகிறது.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத் நகரில் இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் வாழைத் தாரை ஏற்றிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வந்த பசுமாடு ஒன்று, அவரிடம் இருந்து வாழை பழங்களை பறிக்க முயன்றது. அதனை இளைஞர் தடுத்தால் பசுமாடு அவரை முட்டித் தூக்கி வீசியது. சிசிடிவி கேமராவில் பதிவான இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதேபோல முத்துப்பேட்டை குடியிருப்பு பகுதியில் சிறுவனை, இரண்டு நாய்கள் ஓட ஓட துரத்திச் செல்லும் சிசிடிவி காட்சியும் வைரலாகி வருகிறது.
- பி.ஜேம்ஸ் லிசா