இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,645 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா 2-வது அலை ஓய்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 18,47,518 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. இதில் புதிதாக 42 ஆயிரத்து 625 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.
நேற்று ஒரே நாளில் 36,668 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் இதுவரை 3,09,33,022 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 4,10,353 பேர் கொரோ னா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்
இதுவரை இந்தியாவில் 47,31,42,307 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 3,17,69,132, பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள் ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 562 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதுவரை 4,25,757 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
இந்தியா முழுவதும் 48,52,86,570 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 62,53,741 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.