ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு 2 லட்சத்து 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் வந்தடைந்தன.
தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இதுவரை சுமார் 1 கோடியே 24 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில், இன்று ஐதராபாத்தில் இருந்து விமானத்தில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 590 கோவாக்சின் தடுப்பூசிகள் சென்னையை வந்தடைந்தன. தடுப்பூசிகள் அனைத்தும் விமான நிலையத்தில் இருந்து தேனாம்பேட்டையில் உள்ள மாநில அரசு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. மேலும், இந்த தடுப்பூசிகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.







