நாடு முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியை நெருங்கியுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 41 ஆயிரத்து 506 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சிகிச்சை பலனின்றி புதிதாக 895 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து, பலியானோரின் மொத்த எண்ணிக்கை 4 லடசத்து 8 ஆயிரத்து 40 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரத்தில், மேலும், 41 ஆயிரத்து 526 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 99 லட்சத்து 75 ஆயிரத்தை கடந்துள்ளது.
நாடு முழுவதும் தற்போது 4 லட்சத்து 54 ஆயிரத்து 118 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை, 37 கோடியே 60 லட்சத்து 32 ஆயிரத்து 586 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.