தொடரும் இலங்கை கடற்படை அத்துமீறல்; மத்திய, மாநில அரசுகளுக்கு அன்புமணி வேண்டுகோள்

தமிழக மீனவர்களுக்கு எதிரான சிங்களக் கடற்படையின் அத்துமீறல் இனியும் தொடராமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அன்புமணி வலியுறுத்தியுள்ளார். வங்கக் கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மற்றும்…

தமிழக மீனவர்களுக்கு எதிரான சிங்களக் கடற்படையின் அத்துமீறல் இனியும் தொடராமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

வங்கக் கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் 12 பேரை சிங்களப் படைகள் கைது செய்துள்ளன. அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பாமக தலைவர் அன்புமணி, “சிங்களப் படையின் இந்த அத்துமீறல் கண்டிக்கத்தக்கது. காரைக்கால் கடற்கரையிலிருந்து மீன்பிடிப்பதற்காக சென்ற மீனவர்கள் காற்றோட்டம் காரணமாக கோடியக்கரை பகுதியிலிருந்து கச்சத்தீவுக்கு அருகில் அடித்துச் செல்லப்பட்டனர். ஆனாலும் கூட அவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் செல்லாத நிலையில் அவர்களை சிங்களப் படை சிறைபிடித்திருக்கிறது கடந்த இரு மாதங்களில் நடந்துள்ள ஏழாவது கைது இதுவாகும்” என்று கூறினார்.மேலும், “இதுவரை மொத்தம் 60 மீனவர்களை சிங்களக் கடற்படை கைது  செய்திருக்கிறது. கடந்த 22-ஆம் தேதி கைது செய்யப்பட்ட 10 மீனவர்கள் நேற்று விடுவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் தாயகம் திரும்பும் முன்பே அடுத்த கைது அரங்கேறியுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை அவர்களின் படகுடன் மீட்க வேண்டும். தமிழக மீனவர்களுக்கு எதிரான சிங்களக் கடற்படையின் அத்துமீறல் இனியும் தொடராமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் புதிய திட்டம் வகுத்து செயல்படுத்த வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.