பகவதி அம்மன் கோவில் உண்டியலில் போடப்பட்டுள்ள காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் வெளிநாட்டு பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவையும் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் உண்டியலில் ரூ.35 லட்சத்து 45 ஆயிரத்து 322
ரூபாயும்,101 கிராம் தங்கம், 85 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு பணம் ஆகியவை
வசூலாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
இதையும் படியுங்கள் : குரூப் 2 தமிழ் தகுதி தேர்விலிருந்து பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு; உயர்நீதிமன்றம் உத்தரவு
கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்தும் வகையில் கோயில் நிர்வாகம் சார்பில் 17 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியல்கள் அனைத்தும் 3 மாதங்களுக்கு ஒருமுறை எண்ணப்படுவது வழக்கம். இந்தநிலையில் அனைத்து உண்டியல்களும் நேற்று திறந்து எண்ணப்பட்டது.
இதையும் படியுங்கள் : மகளிர் உரிமைத் தொகை எப்போது? – ஈரோடு பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் மேற்பார்வையில் கோவில் பணியாளர்கள், ஆதி பராசக்தி மன்றத்தினர் மற்றும் பக்தர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். உண்டியல் மூலம் ரூ.35 லட்சத்து 45 ஆயிரத்து 322-ம் ரூபாய் ரொக்கப் பணம் , தங்கம் 101 கிராம், வெள்ளி 85 கிராம் மற்றும் வெளிநாட்டு பணம் ஆகியவை வசூலாகியுள்ளது.
–கே.ஆர்.அனகா
பகவதி அம்மன் கோவில் உண்டியலில் காணிக்கையாக வெளிநாட்டு பணம், தங்கம், வெள்ளி வசூல்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.