கோவையில் கார் வெடித்த வழக்கு எதிரொலியாக தமிழ்நாட்டின் பல இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
கோவை, உக்கடத்தில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த மாதம் 23 ம் தேதி கார் வெடித்து ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் தனிப்படை போலீசார் சார்பில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த 27ம் தேதி என்.ஐ.ஏ வழக்கு பதிந்தது.
இந்த வழக்கின் தொடர்ச்சியாக சென்னை, கோவை, திருவள்ளூர், திருப்பூர், நீலகிரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள 43 இடங்களிலும், கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் ஒரு இடத்திலும் இன்று என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இன்று நடத்தப்பட்ட சோதனைகளின் போது, சந்தேக நபர்களின் வீடுகளில் இருந்து டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் குற்றஞ்சாட்டக்கூடிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்கள், தீவிரவாத செயல்களைச் செய்வதற்காக ஆன்லைன் இருந்து ஒரு வாகனம் தாங்கிய IED உட்பட மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்களைத் தயாரிப்பதற்கு வெவ்வேறு ரசாயனங்கள் மற்றும் பிற பொருட்களைப் பெறுவதற்காக இறந்த ஜமேஷா முபீனுடன் சதி செய்துள்ளதாக அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.








