29.7 C
Chennai
April 20, 2024
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021

திமுக ஆட்சியில் இருந்தபோது மக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்கவில்லை; முதல்வர் விமர்சனம்

திமுக ஆட்சிக்கு வந்தால் சாதாரண மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

சென்னையை அடுத்த அம்பத்தூரில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தால் சாதாரண மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படும் என விமர்சனம் செய்தார். அத்துடன் அதிமுக ஆட்சிக்கு எதிராக, திமுக திட்டமிட்டு அவதூறு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாகவும், மு.க.ஸ்டாலின் உண்மை பேசுவது இல்லை என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார். திமுக ஏற்கனவே ஆட்சியில் இருந்தபோது, மக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்கவில்லை, அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை, என தெரிவித்த அவர், மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், அம்பத்தூர் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என உறுதியளித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

முன்னதாக, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், சென்னை மாநகர மக்களின் வளர்ச்சிக்காக ஸ்டாலின் என்ன செய்தார் என கேள்வி எழுப்பினார். தனது சாதனைகளால் இந்தியாவை உலக நாடுகள் திரும்பிப் பார்க்க வைத்தவர் பிரதமர் மோடி என்றும் வல்லரசு நாடுகளே வியக்கும் வண்ணம் கொரோனா தடுப்பு பணியை இந்தியா மேற்கொண்டதாகவும் புகழாரம் சூட்டினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading