திமுக ஆட்சிக்கு வந்தால் பல முதலமைச்சர்கள் தோன்றுவார்கள் : முதல்வர்

திமுக ஆட்சிக்கு வந்தால் பல முதலமைச்சர்கள் தோன்றுவார்கள் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார். சோழிங்கநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது,…

திமுக ஆட்சிக்கு வந்தால் பல முதலமைச்சர்கள் தோன்றுவார்கள் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார்.

சோழிங்கநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின், தேர்தல் பரப்புரையின்போது, திமுக ஆட்சி அமைந்ததும், தான், புதிதாக கல்லூரி கட்டித் தருவதாகவும், சாலை அமைத்துத் தருவதாகவும் வாக்குறுதி அளித்து வருவதாகக் குறிப்பிட்டார்.

திமுக வெற்றி பெற்றால் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக இருப்பாரா, உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சராக இருப்பாரா என கேள்வி எழுப்பிய அவர், இப்போதே இப்படி பேசுபவர்கள், ஒருவேளை நாளை ஆட்சிக்கு வந்தால், என்னாகும் என குறிப்பிட்டார். ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி, என்று பலர் முதலமைச்சர்களாக தோன்றுவார்கள் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரித்தார்.

இதையடுத்து, தாம்பரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டி.கே.எம். சின்னையாவை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.