பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரைப்படம் வெளிவர இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், படக்குழு புரொமோஷனுக்காக திருச்சிக்கு சென்றுள்ளனர். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஜஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இதன் இரண்டாம் பாகம் வரும் 28ம் தேதி வெளியாக உள்ளது. இந்தி உட்பட 5 மொழிகளில் வெளிவர தயாராகியுள்ள இந்தப் படத்தின் முதல் பாகக் கதையின் அறிமுக உரையை, கமல்ஹாசன் வாய்ஸ் ஓவரில் கூறியிருந்தது போலவே, இரண்டாவது பாகத்திலும் கமல்ஹாசன் கதை சுருக்கத்தை விளக்கி இருக்கும் அறிமுக விடியோவானது சில தினங்களுக்கு முன் வெளியாகி வைரலானது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக படக்குழு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மும்பை, பெங்களூர் என பல இடங்களுக்கு சென்று, படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்டு வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக, தற்போது பொன்னியின் செல்வன் படக்குழு திருச்சியில் களம் இறங்கியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை படக்குழு அவர்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளதோடு,
Our Chieftain and Cholas are ready !
Here we come 📍Trichy
#PS2 in cinemas worldwide from 28th April in Tamil, Hindi, Telugu, Malayalam, and Kannada!
என்ற வாசகத்தையும் இணைத்து பதிவிட்டுள்ளனர். தற்போது பொன்னியின் செல்வன் படக்குழு திருச்சியில் எடுத்த இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Our Chieftain and Cholas are ready!
Here we come 📍Trichy#PS2 in cinemas worldwide from 28th April in Tamil, Hindi, Telugu, Malayalam, and Kannada!#CholaTour #CholasAreBack #PS2 #PonniyinSelvan2 #ManiRatnam @arrahman @LycaProductions @RedGiantMovies_ @Tipsofficial… pic.twitter.com/wB8FQQ13Kq— Madras Talkies (@MadrasTalkies_) April 26, 2023
- பி.ஜேம்ஸ் லிசா