சென்னை அருகே, சிறுமிக்கு நடைபெறவிருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
சென்னை திருவிகநகரில், 14 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு இலவச தொலை பேசி எண் 1098 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் தகவலளித்துள்ளார்.
அவர், அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றபோது, வீட்டிலேயே சிறுமிக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து சிறுமியை மீட்டு போலீசார் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் திரு.வி.க நகரை சேர்ந்த அயூப் என்பவர் சிறுமியை திருமணம் செய்ய இருந்தது தெரியவந்தது.







