ஹைதராபாத்தில் 125 அடி அம்பேத்கர் சிலை – தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் திறந்து வைத்தார்!

ஹைதராபாத்தில் 125 அடி உயரத்தில்  நிறுவப்பட்டுள்ள அம்பேத்கர் சிலையை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் திறந்து வைத்தார். இந்திய அரசியல் சாசன சிற்பி என போற்றப்படும் அம்பேத்கருக்கு ஹைதராபாத்தில் பிரமாண்ட வெண்கல சிலை அமைக்கப்பட்டு…

ஹைதராபாத்தில் 125 அடி உயரத்தில்  நிறுவப்பட்டுள்ள அம்பேத்கர் சிலையை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் திறந்து வைத்தார்.

இந்திய அரசியல் சாசன சிற்பி என போற்றப்படும் அம்பேத்கருக்கு ஹைதராபாத்தில் பிரமாண்ட வெண்கல சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் அம்பேத்கருக்கு அமைக்கப்பட்டு உள்ள மிகவும் உயரமான இந்த சிலை 125 அடியில் நிறுவப்பட்டு இருக்கிறது.

ரூ.146.5 கோடி செலவில் இந்த பிரமாண்ட சிலை மற்றும் புதிய தலைமை செயலக வளாகத்தை தெலங்கானா அரசு கட்டியுள்ளது. 2 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்து திறப்பு விழாவுக்கு தயாராகி உள்ளன.

இதைத் தொடர்ந்து அம்பேத்கரின் பிறந்த தினமான இன்று இந்த பிரமாண்ட சிலை மற்றும் தலைமைச் செயலக வளாகத்தை தெலங்கானா முதலமைச்சரும், பாரதிய ராஷ்ட்ரீய சமிதி கட்சித்தலைவருமான சந்திரசேகர் ராவ் திறந்து வைத்தார். அப்போது ஹெலிகாப்டர் மூலம் பிரமாண்ட அம்பேத்கர் சிலை மீது மலர்கள் தூவப்பட்டன.

அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் அவரது பேரன் பிரகாஷ் அம்பேத்கரும் பங்கேற்றார். மேலும், இந்த சிலையை வடிவமைத்த 98 வயதான சிற்பி ராம் வஞ்சி சுடர் கவுரவிக்கப்பட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.