கரூரில் கழிவு நீர் வடிகால் குழியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட கணவன்,மனைவி மீது கான்கிரீட் கலவையைக் கொட்டிய ஒப்பந்ததாரர் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 16 வது வார்டு ஜே.ஜே நகர் பகுதியில் கழிவு நீர் வடிகால் கட்டுமான பணி கடந்த பத்து நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கட்டுமான பணி நடைபெற்று வரும் இடத்தில் ஜேசிபி எந்திரத்தை கொண்டு குழி தோண்டும் போது அருகிலிருந்த வீட்டின் பக்கவாட்டு சுவர் அடித்தளம் பெயர்ந்து விழுந்துவிட்டது.
இதன் காரணமாக வீடு வலுவிழந்ததால் உள் பக்கமாக மேற்கூறையை தாங்கி பிடிக்க இரும்பு ஜாக்கிகள் அமைத்து பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பக்கவாட்டு சுவற்றில் கான்கிரீட் அமைக்க சம்மந்த பட்ட வீட்டின் உரிமையாளரிடம் ஒப்பந்ததாரர் 43,000 ரூபாய் பணம் கேட்டதாக புகார் எழுந்தது. பணத்த கொடுக்க வீட்டின் உரிமையாளர் மறுத்தால் பணத்தை கொடுக்காமல் கான்கிரீட்அமைக்க முடியாது என்று திட்டவட்டமாக ஒப்பந்ததாரர் கூறிய நிலையில் வீட்டின் உரிமையாளர்களான
பாலசந்தர், கோமதி தம்பதிகள் இருவரும் கழிவு நீர் வடிகால் குழியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்களில் குரலுக்கு செவிசாக்காமல் ஒப்பந்ததாரர் போராட்டத்தில் ஈடுப்பட்ட வீட்டின் உரிமையாளர் மீது கான்கிரீட் சிமெண்ட் கலவையை கொட்டியது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







