முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை – மூத்த மருத்துவர் இடைநீக்கம்!

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவியிடம் பாலியல் சீண்டல் செய்ததாக, மாணவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

செங்கல்பட்டில் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில், கண், நரம்பியல், காது மூக்கு தொண்டை, எலும்பியல் , பச்சிளம் குழந்தை பிரிவு உட்பட பல பிரிவுகளின் கீழ் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் 100 இளங்கலை மருத்துவ மாணவர்கள், 100 டிப்ளமோ மூன்றாண்டு செவிலியர் மாணவர்கள் , 50 நான்கு ஆண்டு செவிலியர் பட்டப்படிப்பு மாணவர்கள், 88 முதுகலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கையுடன் கூடிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் பச்சிளம் குழந்தை பிரிவில் நேற்று முன்தினம் இளங்கலை மருத்துவம் இறுதி ஆண்டு பயிலும் மாணவியிடம் , மூத்த மருத்துவர் மற்றும் முதுகலை முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர் ஜிதேந்திரன் என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட மாணவி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ராஜஸ்ரீயிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் நேற்று காலை 10
மணி அளவில் விசாரணை நடைபெறுவதாக இருந்தது.

அதற்கு முன்பாக இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சக மாணவர்கள் முதுகலை மாணவரின் செயலை கண்டித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துணைமுதல்வர் அனிதா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையை தொடர்ந்து மாணவர்கள் கலைந்து
சென்றனர்.

இதனிடையே சம்பவம் தொடர்பாக விசாரணை குழு அமைக்கப்பட்டு நடைபெற்ற விசாரணையில் துறை ரீதியாக மருத்துவர் இடைநீக்கம் செய்யப்பட்டு , விசாரணை அறிக்கை இந்திய மருத்துவ கவுன்சில்க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

ஈசிஆர் சாலைக்கு கருணாநிதி பெயர் ஏன்? அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்

Arivazhagan Chinnasamy

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 174 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

Web Editor

’ராசா கண்ணு’ பாடல் மனதை என்னமோ செய்கிறது – நடிகர் சூரி உருக்கம்!

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading