தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க பெரும்பான்மையை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்திருந்த காங்கிரஸ் மற்றும் சிபிஐ ஆகிய கட்சிகள் ஆகியவை தவெகவிற்கு ஆதரவு அளித்துள்ளன. சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 5 தொகுதிகளும், சிபிஐ 2 தொகுதிகளும் வென்றிருந்தான. இதனை தொடர்ந்து தவெக ஆதரவு எம்.எல்.ஏக்களின் பலம் 115 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில் இன்று மாலை 4: 30 மணியளவில் தமிழ் நாடு ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கரை தவெக தலைவர் விஜய் சந்தித்து மீண்டும் ஆட்சியமைக்க கோர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் விஜய் – ஆளுநர் சந்திப்பு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன் படி விஜய் ஆளுநரை மாலை 6 மனிக்கு சந்திப்பார் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது. விசிக, மற்றும் சிபிஐ(எம்) ஆகிய கட்சிகள் தவெக விற்கு ஆதரவு அளிக்க உள்ளதகவும் அதனால் தான் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.







