தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து பெரும்பான்மைக்கான எண்ணிக்கையை திரட்டும் பணியில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக தவெக தரப்பில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு கோரப்பட்டது.
இதில் 5 எம்.எல்.ஏக்களை கொண்ட காங்கிரஸும் 2 எம்.எல்.ஏக்களை கொண்ட சிபிஐ கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு அளித்துள்ளன. இதனால் தவெக ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்தது.
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுன் தவெகவிற்குஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது. தேர்தலில் 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற சிபிஐ(எம்) கட்சி ஆதரவு அளித்துள்ளதால் தவெகவின் பலம் 117 ஆக உயர்ந்துள்ளது.







