28.9 C
Chennai
September 26, 2023
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

2020-ம் ஆண்டு 9,849 இணையதள கணக்குள் முடக்கம்!

நாட்டின் இறையாண்மை மற்றும் பொது ஒழுங்கிற்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் 9,849 சட்டவிரோத இணையதள கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியுள்ளார்.


மக்களவையில் எழுத்துப்பூர்வமாக நேற்று அவர் அளித்துள்ள பதில் கடிதத்தில், “இந்தியாவின் இறையாண்மை, மாநிலத்தின் பாதுகாப்பு, வெளிநாட்டு நட்பு உறவுகள் மற்றும் பொது ஒழுங்கிற்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் கடந்த 2020-ம் ஆண்டு செயல்பட்ட 9,849 இணையதளங்களின் கணக்குள் முடக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தகவல் தொழில்நுட்பவியல் 69A சட்டத்தின்படி எடுக்கப்பட்டுள்ளது.
இணையதள கணக்குள் குறித்த புகார் பெரும்பாலும் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட (Intermediary Guidelines and Digital Media Ethics Code) Rules, 2021 சட்டத்தின்படி தீர்க்கப்பட்டுள்ளதாக” அவர் தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்


இந்த சட்டத்தின் அடிப்படையில் கடந்த 2017-ம் ஆண்டு 1,385, 2018-ம் ஆண்டு 2,799, 2019-ம் ஆண்டு 3,603 இணையதள கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. மூடக்கப்பட்ட இணையதள கணக்குகளின் எண்ணிக்கை கடந்த 2019-ம் ஆண்டைவிட 170 சதவீதம் அதிகமாகும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

தேசியவாத காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பாகுபலி போஸ்டர்!

Web Editor

சீனாவில் பெய்த புழு மழை; அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!

Jayasheeba

திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை முறியடிப்பேன்: சீமான் பேச்சு

Jeba Arul Robinson