புதுக்கோட்டையில் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள், தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில், திருமயம் அருகே உள்ள வி.லெட்சுமிபுரம் கிராமத்தில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பெரியமாடு, சிறியமாடு என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில், திருச்சி, மதுரை, தேனி, தூத்துக்குடி, சிவகங்கை, தஞ்சை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். பெரியமாடு பிரிவில் 6 ஜோடிகளும், சிறியமாடு பிரிவில் 12 ஜோடிகளும் பங்கேற்றன.
இதையும் படியுங்கள் : ஜெயலலிதா பிறந்தநாள் – உருவச்சிலைக்கு மாலை அணிவித்து இபிஎஸ் மரியாதை!
பெரிய மாட்டு வண்டி எல்லைக்கு சென்று திரும்பிவர 8 கிலோமீட்டர் தூரமும், சிறிய மாட்டு வண்டி எல்லைக்கு சென்று திரும்பிவர 6 கிலோமீட்டர் தூரமும், கரிச்சான்மாட்டிற்கு 5 கிலோமீட்டர் தூரமும் நிர்ணயிக்கப்பட்டது.
போட்டி போட்டுக் கொண்டு சாலையில் சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகளை சாலை நெடுகிலும் இரு புறங்களிலும் ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்து உற்சாகப்படுத்தினர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.