முக்கியச் செய்திகள் தமிழகம்

உராங்குட்டான் கடத்தல் கும்பலுக்கு ஆதரவாக செயல்பட்ட காவலர்கள் பணியிடை நீக்கம்

உராங்குட்டான் குரங்கு கடத்தல் கும்பலுக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறி செங்குன்றம் காவல் உதவி ஆய்வாளர், காவலர்கள் உள்ளிட்ட நான்கு பேரை பணியிடை நீக்கம் செய்து ஆவடி காவல் ஆணையர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

அரியவகை உராங்குட்டான் குரங்கு கடத்தல் கும்பலுக்கு ஆதரவாக செயல்பட்டதாக
எழுந்த புகாரின்பேரில், செங்குன்றம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அசோக், காவலர்கள் வல்லரசு, மகேஷ், கிருஷ்ணமூர்த்தி ஆகிய நான்கு பேரை பணியிடைநீக்கம் செய்து ஆவடி மாநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

வனத்துறை சட்ட விதிகளை மீறி செயல்பட்ட காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்கள் மீது பணியிடை நீக்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் கடத்தலில் ஈடுபட்ட கும்பல் யார் என்பது குறித்தும், எங்கிருந்து குரங்கை கடத்தினார்கள் என்பது குறித்தும் தொடர்ந்து வனத் துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மேகதாது விவகாரத்திற்கு கருப்பு கொடி ஏந்தி போராட்டம்- பி.ஆர்.பாண்டியன்

G SaravanaKumar

காதணிக்காக மூதாட்டி கொலை; மர்ம நபர்கள் வெறிச்செயல்

Halley Karthik

ராஜ் குந்த்ரா ஆப்-பில் இருந்து 51 ஆபாச படங்கள் பறிமுதல்

Gayathri Venkatesan