மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தக கண்காட்சி வருகின்ற அக்டோபர் மாதம் 12-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்து செல்ல உத்தரவிட்டதன் பேரில், மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர் சங்கம் இணைந்து புத்தக கண்காட்சியை நடத்துகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன்படி, அக்டோபர் மாதம் 12-ஆம் தேதி முதல் அக்டோபர் 22-ஆம் தேதி வரை அனைத்து நாட்களிலும் மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள “மதுரை மாநாட்டு மையத்தில்” மாபெரும் புத்தக கண்காட்சி காலை 11.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நடைபெற உள்ளது.
இதில் புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சார்பாக ஏறக்குறைய 200-க்கும் மேற்பட்ட புத்தக அங்காடிகள் அமைக்கப்படவுள்ளது.
இப்புத்தக கண்காட்சியில் சிறப்பு அம்சமாக தினந்தோறும் மாலை வேளையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், பேச்சு போட்டிகள், நட்சத்திர பேச்சாளர்களின் உரை வீச்சுகள் மற்றும் பட்டிமன்றங்கள் நடைபெற உள்ளன
எனவே, வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றும் பொருட்டு இப்புத்தக கண்காட்சியில் சிறார்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சங்கீதா கேட்டுக்கொண்டுள்ளார்.