பாஜகவினரை என்னுடைய குருவாக கருதுகிறேன் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காகவும், இந்திய ஒற்றுமையை வலியுறுத்தியும், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ’இந்திய ஒற்றுமை நடைபயணம்’ மேற்கொண்டு வருகிறார். கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த நடைபயணம் காஷ்மீரில் சென்று முடிவடைய உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திர பிரதேசம், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை கடந்து தற்போது டெல்லியில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எதிர்க்கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் மாற்றுப்பார்வையுடன் மக்களை அணுக வேண்டும் என்றும் கூறினார். பாஜகவினரை தன்னுடைய குருவாக கருதுகிறேன் என்று கூறிய அவர், காங்கிரஸ் கட்சி செல்லும் பாதையை தீர்மானிக்க பாஜகவினரும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரும் உதவுவதாக குறிப்பிட்டார்.