அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது குறித்து அந்த கட்சியின் தலைமை தான் முடிவெடுக்க வேண்டும் என தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.
சட்டப் பேரவை தேர்தல் தொடர்பாக தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய இணை அமைச்சருமான கிஷன் ரெட்டி, சென்னை கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில், பாஜக தேர்தல் இணைப் பொறுப்பாளர் வி.கே.சிங், பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, மாநில தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பேசுகையில்,
“அதிமுக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருவதாக கூறினார். சசிகலா மற்றும் தினகரனின் பலம் பற்றி ஈபிஎஸ், ஓபிஎஸ் நன்கு அறிவர். சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து அதிமுக தலைமையில் இருப்பவர்கள்தான் இணைந்து முடிவெடுக்க முடியும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நாங்கள் அரசியலுக்காக மட்டும் எதையும் செய்வதில்லை. தமிழகத்தின் வளர்ச்சியும் நலனும் பாஜகவுக்கு முக்கியம். தமிழ்நாடு கலாச்சாரத்தை நாங்கள் பாதுகாக்கிறோம்.
அதிமுக உடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு சுமுகமான முறையில் நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தையில் எங்களுக்கு 100 சதவீத பலன் கிடைக்கும். 19-ம் தேதிக்குள் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்தத் தொகுதிகள் என்ற விவரம் வெளியிடப்படும். தற்போது இதுகுறித்து எதுவும் கூற முடியாது.
அதிமுக கூட்டணியில் கிடைக்கும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்” என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அதிமுகாவில் சசிகலா இணைப்பதை அக்கட்சிதான் முடிவுச் செய்யும் பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி