தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றினார். பட்ஜெட் உரையின்போது அமைச்சர் தங்கம் தென்னரசு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
”5 ஆண்டாக மக்களை வாட்டி வதைத் திராவிட மாடல் என்கிற ஏமாற்ற மாடல் திமுக அரசு தனது பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. இந்த அரசு எந்த ளவிற்கு மக்களுக்கு காது குத்துகிறது என்பதை நாட்டு மக்கள் அறிய வேண்டும் என்பதற்காக இந்த அழைப்பிதழை உங்களிடம் கொடுத்திருக்கிறோம்.
2021 ல் திமுக சட்டமன்றத் தேர்தலின் போது 535 வாக்குறுதிகள் கொடுத்தார்கள். அதில் பெருமளவு நிறைவேற்றவில்லை. அரசு ஊழியர்களையும் இந்த அரசு ஏமாற்றி உள்ளது. பலதுறையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு பல்வேறு உறுதிமொழிகளை அளித்தார்கள். எதையும் நிறைவேற்றவில்லை. எல்லோரும் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழகம் போராட்டக் களமாக மாறி இருக்கிறது.
கடந்த ஐந்து ஆண்டு போல இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வார்த்தை ஜாலங்கள் நிறைந்த மேனா மினுக்கே துறையாக தான் இருக்கிறது தவிர உருப்படியாக எதுவும் இல்லை.
2025-26 வரி வருவாய் 2.35 லட்சம் என குறைந்துள்ளது. 15 ஆயிரம் கோடி வருவாய் குறைந்ததற்கான காரணத்தை நிதி அமைச்சர் விளக்கவில்லை.
ஸ்டாலின் ஆட்சி வந்தவுடன் ரகுராமன் ராஜா தலைமையில் நிதி மேலாண்மை குழு அமைத்து மாநில நிதிநிலை சீர் செய்யப்படும் என்று சொன்னார்கள். நிபுணர் குழு அமைத்த பிறகுதான் அதிக கடன் வாங்கி இருக்கிறார்கள். வரவு செலவு பற்றி உருப்படியாக எதுவும் இல்லை.
வேளாண் பட்ஜெட் என்று விவசாயிகள் ஏமாற்றும் வகையில் ஒரு பட்ஜெட்டை போட்டிருக்கிறார்கள். பால்வளத்துறை விவசாயத்துறை மீன்வளத்துறை கால்நடை துறை பல துறைகளுக்கு
விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட் தான் வேளாண் பட்ஜெட்.
அத்திப்பழம் வெளியே அழகாக இருக்கும். உற்றுப் பார்த்தால் உள்ளே சொத்தையாக இருக்கும் என்பதற்கு உதாரணமாக தான் இந்த நிதிநிலை அறிக்கை இருக்கிறது” என்றார்.







