மேற்கு வங்கத்தில் 2 கட்டமாக சட்டமன்றத் தேர்தல் : தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு……!

மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தமிழ் நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்காக தேர்தல் தேதியை அறிவித்தார். அதன் தமிழ் நாட்டில் ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குபதிவும், மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.

அதே போல அசாம், புதுச்சேரி மற்றும்  கேரளா ஆகிய மாநிலங்களில் ஏப்ரம் 9 ஆம் தேதி வாக்குபதிவும் மே 4 ஆம் தேதி வாக்குபதிவும் நடைபெறுகின்றன.

இதற்கிடையில் மேற்கு வங்கத்தில் மட்டும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதியும் இரண்டாம் கட்ட வாக்குபதிவு ஏப்ரம் 29 ஆம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்கு பதிவானது மே 4 ஆம் தேதி நடைபெறுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.