வன்னியர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் தான் உள் இடஒதுக்கீடு கிடைத்ததாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் பரப்புரை மேற்கொண்ட அவர், டெல்டா மாவட்டங்களில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் அதிமுக கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டார்.
முதலமைச்சராக வேண்டும் என மு.க.ஸ்டாலின் துடிப்பதாக சாடினார். தமிழகத்தில் விவசாயி மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்ற அலை வீசுவதாகவும் அவர் தெரிவித்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் வன்னியர்களுக்கு 10 புள்ளி 5 சதவீத உள் ஒதுக்கீடு கிடைத்திருப்பதாகவும் இதேபோல், அனைத்து சாதியினருக்கும் உள் ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.







