முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

திருநங்கைகளுக்கு நலதிட்ட உதவி வழங்கிய நியூஸ் 7 தமிழின் அன்பு பாலம்

நியூஸ் 7 தமிழின் அன்பு பாலம் மற்றும் லயன்ஸ் இன்டர் நேஷனல் சார்பில் திருநங்கைகள் மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கு பல்வேறு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி திருச்சியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

நியூஸ்7 தமிழின் அன்பு பாலம் நிகழ்ச்சியின் வாயிலாக பல்வேறு அமைப்புகள்
இணைந்து எண்ணற்ற உதவிகளை, நலத்திட்டங்களை ஏழை எளிய மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கு வழங்கி வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையும் படிக்கவும் : திருச்செந்தூர் மாசி திருவிழா; பக்தர்கள் காவடி ஏந்தி பாத யாத்திரை

அந்த வகையில் லயன்ஸ் இன்டர்நேஷனல் குழுமத்தின் மாவட்ட ஆளுநரின் சிறப்பு சேவை
திட்டமான விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 17 திருநங்கைகள் மற்றும் ஆதரவற்ற குடும்பங்களுக்கு ஆடுகள் மற்றும் தொழில் துவங்குவதற்கான நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாவட்ட தலைவர் வசந்தா ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தனுஷின் 50-வது படத்திற்கு இசையமைக்கும் இசைப்புயல் ? – லேட்டஸ்ட் அப்டேட்!

Yuthi

ஆப்கானிஸ்தான் கார் குண்டு வெடிப்பில் 8 பேர் உயிரிழப்பு!

Jeba Arul Robinson

சேதமடைந்த பயிர்களை கணக்கிட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் – இபிஎஸ்

Arivazhagan Chinnasamy