31.9 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

பெய்ஜிங்கில் இஸ்ரேல் தூதரக ஊழியர் மீது தாக்குதல் – சீனாவில் பரபரப்பு!

பெய்ஜிங்கில் இஸ்ரேல் தூதரக ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹமாஸ் குழுவினருக்கும் இடையிலான போர் உக்கிரமடைந்துள்ளது. காசாவில் தரைவழித் தாக்குதல்களை நடத்தவும் இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது. இதுவரை வான்வழித் தாக்குதல்களில் காசாவில் குண்டு மழை பொழிந்து வந்த இஸ்ரேல் ராணுவம், தரைவழி படையெடுப்புக்கான ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதற்காக பீரங்கி வண்டிகள் உள்ளிட்ட படைகளை காசா முனையில் குவித்து வருகிறது.  தரைவழித் தாக்குதலை தொடங்க விருப்பதால் வடக்கு காசாவில் உள்ள 11 லட்சம் மக்கள் 24 மணி நேரத்துக்குள் அங்கிருந்து வெளியேறி தெற்கு பகுதிக்கு செல்ல வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் சீனாவின் பெய்ஜிங்கில் இஸ்ரேல் தூதரக ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டதாகவும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தாக்குதல் தூதரகத்தின் மீது நடத்தப்படவில்லை என்றும், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : காஸா மீது பாஸ்பரஸ் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் – பாலஸ்தீனம் குற்றச்சாட்டு!

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன போராளிகளுக்கு இடையே மோதல் தீவிரமடைவது குறித்து சீன வெளியுறவு அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது. உலக நாடுகள் பலவும் இந்த போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading