வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசி மோகன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 27-ஆம் தேதி 238 வாக்குச் சாவடிகளில் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசி மோகன் ஆய்வு மேற்கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், வாக்கு எண்ணிக்கை தொடங்குவது முதல் சான்றிதழ் கொடுக்கும் வரை அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு 600 காவல்துறையிரும், கிழக்கு தொகுதிக்கு 150 காவலர்கள் என 750 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், அடையாள அட்டையில்லாத நபர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், வாக்கு எண்ணிக்கை மையத்தில் முகவர்கள் வேட்பாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்று குறித்து ஆலோசனையில் ஈடுபட்டோம். அதில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு முகவர்கள் , வேட்பாளர்கள் என்ன பொருட்கள் உள்ளே எடுத்து வர வேண்டும் என்பது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது .
நாளை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் சான்றிதழ் கொடுக்கும் வரை அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் செய்துள்ளதாகவும் , அமைதியாக , சமூகமாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் தயார் என கூறிய சசி மோகன், வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு அடையாள அட்டையில்லாத நபர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். அவர்கள் எடுத்து வர கூடாத பொருட்கள் குறித்தும் அறிவுறுத்தபட்டுள்ளதாகவும், குறிப்பாக வாட்டர் பாட்டில் , தீப்பெட்டி உள்ளிட்டவைகளுக்கு அனுமதியில்லை என்றும் தெரிவித்தார்.
- பி.ஜேம்ஸ் லிசா