காபூலில் இருந்து 129 பயணிகளுடன் இந்தியா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்

தலிபான்கள் ஆட்சியை கைப்பற்ற உள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து 129 இந்தியர்களுடன் ஏர் இந்தியா விமானம் டெல்லி புறப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில், அரசு படைகளுக்கும் தலிபான்களுக்கும் பல வருடங்களாக போர் நடந்துவருகிறது. அமெரிக்காவில்,…

தலிபான்கள் ஆட்சியை கைப்பற்ற உள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து 129 இந்தியர்களுடன் ஏர் இந்தியா விமானம் டெல்லி புறப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில், அரசு படைகளுக்கும் தலிபான்களுக்கும் பல வருடங்களாக போர்
நடந்துவருகிறது. அமெரிக்காவில், இரட்டை கோபுரம் தாக்கப்பட்டதை அடுத்து
ஆப்கானுக்குள் வந்த அமெரிக்க ராணுவம், கடந்த 20 ஆண்டுகளாக தலிபானுக்கு எதிராகப் போரிட்டு வந்தது. இந்நிலையில் அமெரிக்க ராணுவம் இப்போது வெளியேறி
வருகிறது.

இதனால் அரசு படைகளுக்கு எதிராக போரிட்டு பல்வேறு மாகாணங்களை கைப்பற்றிய தலிபான்கள், அவற்றைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்குள்ளும் அவர்கள் நுழைந்து விட்டனர். இதனால் ஆட்சி அதிகாரத்தை மாற்றும் நிகழ்வுகள் அங்கு அமைதியாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. ஆப்கான் அரசு, ஆட்சியை தலிபான்களிடம் ஒப்படைக்க இருக்கிறது.

இதனால், அங்கு இந்திய அதிகாரிகளை அழைத்து வர, ஏர் இந்தியா விமானம் டெல்லியில் இருந்து காபூல் சென்றது. இந்த விமானம் அங்கு பணியாற்றும் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் என அனைவரையும் அழைத்து வர உள்ளது. முதற்கட்டமாக, காபூலில் இருந்து 129 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் டெல்லி புறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.