தமிழ்நாட்டில் புதிதாக 1,896 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் புதிதாக 1,896 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 973…

தமிழ்நாட்டில் புதிதாக 1,896 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு
முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 973 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,896 பேருக்கு தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கொரோனாவால் 25 லட்சத்து 88 ஆயிரத்து 781 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொற்றில் இருந்து ஆயிரத்து 842 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 25 லட்சத்து 33
ஆயிரத்து 804 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில், பாதிப்பு
காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை
உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்து 519 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் புதிதாக 216 பேருக்குத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொற்றுக்கு
சிகிச்சை பெற்றுவந்த 221 பேர், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப் பட்டுள்ளனர். கோவையில் சென்னையை விட தொற்று பாதிப்பு அதிகரித்து
வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 225 பேருக்கு தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் 179 பேருக்கும் சேலத்தில் 127 பேருக்கும் புதிதாகத்
தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.