தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எத்தனை அணிகள் உருவானாலும் அதிமுக கூட்டணி வெற்றிபெறும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 13ஆவது இளைஞரணிக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் தலைவர் ஜிகே.வாசன், கூட்டணி வெற்றிக்காக 234 தொகுதிகளிலும் தமாகாவினர் பணியாற்றுவார்கள் எனத் தெரிவித்தார்.
எத்தனை அணிகள் வந்தாலும் அதிமுக கூட்டணி வெற்றிபெறும் என தெரிவித்த அவர், எதிர்கட்சிகளின் பொய் வாக்குறுதிகளை, அதிமுக நிஜ வாக்குறுதிகள் வெல்லும் எனக் கூறினார்.







