பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், காதலர் தினத்தில் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் முகக்கவசம், தலைகவசம் அணியாமல் சென்ற வழக்கில் மும்பை காவல்துறையினரிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.
காதலர் தினத்தை கொண்டாடும் விதமாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் அவரது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் முகக்கவசம் மற்றும் தலைக்கவசம் அணியாமல் மும்பை நகரத்தில் பயணம் செய்துள்ளார். அந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலம் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையில் முதல் இடத்தில் இருந்து வரும் நிலையில், அரசின் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையை மீறி விவேக் ஓபராய் முகக்கவசம், தலைகவசம் ஆகியவற்றை அணியாமல் சாலையில் பயணித்தது குறித்து அறிந்த மும்பை காவல்துறையியனர், கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி அவர் மீது வழக்குப்பதிவு செய்து 500 ரூபாய் அபராதம் விதித்தனர்.
இந்நிலையில், நடிகர் விவேக் ஓபராய், தனது செயல் குறித்து ட்விட்டரில் மன்னிப்புக் கோரியுள்ளார். இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் கூறியதாவது, “தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதிற்கு மும்பை காவல்துறையினர் செக் மேட் வைத்துள்ளனர். எனது இந்த செயலுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் மேலும் என் தப்பை எனக்கு உணர்த்தியதற்கு மும்பை காவல்துறையினருக்கு நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்” என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.