அணையில் மீன் பிடிக்க சென்ற இளைஞர் உயிரிழப்பு!

விருதுநகரில் குல்லுர் சந்தை அணையில் மீன் பிடிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்த பால்பாண்டி வயது (31) என்பவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை மீன் பிடிப்பதற்காக குல்லூர் சந்தை அணைக்கு நன்பர்களுடன் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து இரவு முழுவதும் பால்பாண்டி வீட்டிற்கு திரும்பாத நிலையில் பால்பாண்டி அணையில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் உறவினர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், பொதுமக்களுடன் இணைந்து பால்பாண்டியன் உடலை தேடி உள்ளனர். சுமார் 2 மணி நேரத்திற்கு பின் தீயணைப்பு துறையினர் பால்பாண்டியன் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சூலக்கரை காவல் நிலைய காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.