டெல்லியில் காரில் இழுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்த இளம்பெண் அஞ்சலிக்கு குடிப்பழக்கம் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, அவை அனைத்தும் தவறாக பரப்பப்பட்டவை என்று, சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் கஞ்சவாலா பகுதியில் ,சுல்தான்புரி காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் புத்தாண்டு தினமான ஜனவரி 01-ஆம் தேதி அன்று 20 வயதான அஞ்சலி சிங் என்பவர் பல கிலோ மீட்டர் தூரம் கார் மோதி இழுத்துச் செல்லப்பட்டு கொடூரமாக உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுமட்டுமின்றி இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் நிலவி வரும் பல்வேறு மர்மங்கள் ஒவ்வொன்றாக தற்போது அவிழத் தொடங்கியுள்ளன.அதன் ஒரு பகுதியாக அஞ்சலி சிங் புத்தாண்டு தினத்தன்று அதிகாலை தனது நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனம் தொடர்பான பணிகளை முடித்து விட்டு ,தனது தோழியுடன் வீட்டிற்கு திரும்பும் வழியில் எதிர்பாராதவிதமாக சாம்பல் நிற பலேனோ கார் மீது மோதியதில் அவர் தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனால் காருக்கடியில் சிக்கிக்கொண்டுள்ளார்.
அந்த சாம்பல் நிற பலேனோ காரின் உள்ளே ஐந்து ஆண்கள் பயணம் செய்த நிலையில், காருக்கடியில் அஞ்சலி சிங் சிக்கியிருப்பது தெரிந்தும் 12 கிலோ மீட்டர் தூரம் வரை இலுத்தே சென்றுள்ளனர்.இதனால் மிகவும் கொடூரமான முறையில் இளம்பெண் அஞ்சலி உயிரிழந்தார்.இதனையடுத்து காரில் பயணம் செய்தவர்களை கைது செய்த சுல்தான்புரி காவல் துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உத்தரவின்பேரில் இளம்பெண் மரணம் பற்றிய விரிவான அறிக்கையை அளிக்கும்படி டெல்லி காவல் துறை ஆணையருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது . இதன் அடிப்படையில் டெல்லி போலீசில் சிறப்பு காவல் ஆணையாளராக உள்ள ஷாலினி சிங் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டு கொண்டது.
இதனையடுத்து டெல்லி காவல்துறை விசாரணையை துரிதப்படுத்தியது. அதன்படி கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நாங்கள் புத்தாண்டு தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டு மது அருந்திவிட்டு திரும்பிச் செல்லும் போதுதான் இந்த சம்பவம் நடந்தது.நாங்கள் மது போதையில் இருந்ததால்எங்களது காருக்கடியில் யாரோ சிக்கியிருந்தது தெரியாது என்று கூறியுள்ளனர்.
இந்த நிலையில், அஞ்சலியின் இறுதி சடங்குகள் முடிவடைந்த பிறகு, அவரது தோழி என்று கூறி கொண்டு முகமூடி அணிந்தபடி நிதி என்பவர் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.
அதில் கைது செய்யப்பட்ட ஆண்கள் கூறியிருக்கும் வாக்குமூலத்தை முற்றிலுமாக மறுத்துள்ள அவர், நானும், அஞ்சலியும் ஒரே ஸ்கூட்டியில் தான் பயணம் செய்தோம். அப்போது உயிரிழந்த அஞ்சலி போதையில் இருந்ததாகவும், ஸ்கூட்டியை யார் ஓட்டுவது என்ற வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். பிறகு அஞ்சலியின் வற்புறுத்தலால் ஸ்கூட்டியை நான்தான் ஓட்டினேன். இருவரும் ஸ்கூட்டியில் வந்துகொண்டிருக்கும் போதுதான் சற்றும் எதிர்பாராதவிதமாக காரில் மோதி இருவரும் கீழே விழுந்தோம்.
நான் வேறு ஒரு புறம் விழுந்துவிட ,காருக்கு அடியில் அஞ்சலியின் கால் சிக்கி உதவிக்காக கத்தினார். ஆனால் காரில் இருந்த ஆண்கள் அதை சட்டை செய்யாமல் “தொடர்ந்து ஓட்டிச்” சென்றனர் . இதுமட்டுமின்றி அவர்கள் என்னையும் தாக்க முயன்றனர். ஆனால் சிறு காயங்களுடன் நான் தப்பிவிட்டேன் என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த சம்பவத்தை நான் நேரில் பார்த்ததால் பயத்தில் போலீசாரிடம் எதுவும் கூறாமல் அங்கிருந்து வீட்டிற்கு சென்றுவிட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அஞ்சலியின் தாய் வழி மாமா செய்தியாளர்களிடம் பேசிய போது இது நிதி இறந்து அவரது இறுதி சடங்குகள் வரை மறைந்து இருந்த நிதி தற்போது வெளியில் வந்து தைரியமாக பேசியுள்ளார்.இப்போது காவல்துறையை பார்த்து அவருக்கு பயமில்லையா? சம்பவம் நடந்த இடத்தில இருந்த அவர் உடனே காவல்துறையிடமோ அல்லது அஞ்சலியின் குடும்ப உறுப்பினர்களிடமோ தான் முதலில் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அதை செய்யாமல் பயந்துவிட்டேன் என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியவில்லை.இது நிதியின் சதி திட்டமாக கூட இருக்கலாம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் அஞ்சலிக்கு குடி பழக்கம் என்பது அறவே கிடையாது. அப்படி அவர் குடித்திருந்தால் அஞ்சலியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும். வேண்டுமென்றே அஞ்சலியின் தோழி நிதி குற்றசாட்டுகளை அடுக்குகிறார். அஞ்சலியை காரில், மோதி இழுத்துச்சென்ற 5 பேருக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அதேபோல் நிதி அளித்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள அஞ்சலியின் தயார், நிதி எனக்கு யாரென்றே தெரியாது. அவரை நான் பார்த்ததே இல்லை. உண்மையில் அவர் தோழியென்றால் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து அவர் ஏன் தப்பித்துச் செல்ல வேண்டும். இதில் நீதிக்கும் தொடர்பு இருக்கலாம். முறையான விசாரணை நடத்த்த்தப்பட வேண்டும். அஞ்சலிக்கு குடிப்பழக்கம் கிடையாது. ஒருநாளும் அவர் போதையில் வீட்டிற்கு வந்தது கிடையாது. அப்படி இருந்திருந்தால் அது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிந்திருக்கும் என்று கூறியுள்ளார்.
தற்போது இந்த சம்பவம் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும் (ஏஏபி) எதிர்க்கட்சியில் உள்ள பாரதிய ஜனதா கட்சிக்கும் (பிஜேபி) இடையே அரசியல் மந்தநிலையைத் தூண்டியுள்ளது. மேலும் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அஞ்சலியின் குடும்பத்தைச் சந்தித்து, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கனவே அறிவித்த ₹10 லட்சத்தைத் தவிர, அஞ்சலியின் குடும்பத்தாருக்கு வேலை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
இதுதவிர டெல்லி காவல்துறையின் சட்டம் ,ஒழுங்கு சிறப்பு ஆணையர் சாகர் ப்ரீத் ஹூடா, காவல்துறையினர் இந்த வழக்கில் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருவதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு “கடுமையான தண்டனை” கிடைப்பதை உறுதி செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.