தமிழ்நாட்டில் மேலும் குறைந்தது கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் புதிதாக 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள தாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்நிலை யில், தமிழ்நாட்டில் இன்று 765 பேருக்கு…

தமிழ்நாட்டில் புதிதாக 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள தாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்நிலை யில், தமிழ்நாட்டில் இன்று 765 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27, 19, 515 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றுப் பாதிப்பில் இருந்து இன்று 879 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டில் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 26, 74, 327 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுப் பாதிக்கப்பட்டவர்களில் 8,827 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36, 361 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டங்களை பொறுத்தவரை சென்னையில் 118 பேருக்கும் கோயம்புத்தூரில் 125 பேருக்கும் தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் தொற்றுப் பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.