தமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு 6 ஆயிரத்துக்கும் கீழாகக் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் 5,755 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. .
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 406 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 5 ஆயிரத்து 755 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்து 55 ஆயிரத்து 332 ஆக அதிகரித்துள்ளது.
தொற்றில் இருந்து 8 ஆயிரத்து 132 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 23 லட்சத்து 75 ஆயிரத்து 963 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில், 150 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 32 ஆயிரத்து 51 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையிலும் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. சென்னையில் புதிதாக 350 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர். 245 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஈரோட்டில் 597 பேருக்கும் திருப்பூரில் 361 பேருக்கும் சேலத்தில் 398 பேருக்கும் கோவையில் 698 பேருக்கும் புதிதாகத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறைந்த பட்சமாக பெரம்பலூரில் 33 பேருக்கும் ராமநாதபுரத்தில் 35 பேருக்கும் கொரோனாதொற்று புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.