நாடு முழுவதும் இதுவரை 45 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 44,230 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 555 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதன் மூலம், கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,23,217 ஆக அதிகரித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 42,360 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை, இதுவரை மொத்தம் 45.60 கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.