ஈரோட்டில் வீட்டில் கஞ்சா பதுக்கிய வழக்கில் 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வழக்கறிஞர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் சோலார் வசந்தம் நகர் ஹரி கார்டன் பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம், 232.5 கிலோ கஞ்சாவை வீட்டில் பதுக்கி வைத்திருந்ததாக மணி மகன் கேசவன், அவரது மனைவி பிருந்தா ஆகிய இருவரையும் தாலுகா போலீசார் கைது செய்தனர். அதனை தொடர்து ஈரோடு குயவன் திட்டு பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கஞ்சா கடத்தலுக்கு உதவியாக இருந்த ஈரோடு கள்ளியன்காடு பகுதியை சேர்ந்த வழக்கறிஞரான எழில் என்ற ஏழிலரசன், மாணிக்கம்பாளையம் நேதாஜி நகர் மதன்குமார் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். பத்து மாதங்களாக மூவரும் தலைமறைவாக உள்ள நிலையில் மூன்று பேரையும் ஈரோடு தாலுகா போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், இவர்கள் மூவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க, ஈரோடு எஸ் பி சசி மோகன், கலெக்டருக்கு பரிந்துரைத்தார். இதனை ஏற்ற மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி நேற்று 3 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதன்பேரில், ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதற்கான உத்தரவு நகலை, ஈரோடு தாலுகா போலீசார் சிறைத்துளை அதிகாரிகளிடம் வழங்கினர்