தமிழ்நாட்டில் புதிதாக 1,604 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் புதிதாக 1,604 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழு வதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 447 பேருக்கு கொரோனா…

தமிழ்நாட்டில் புதிதாக 1,604 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழு வதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 447 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,604 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கொரோனாவால் 26 லட்சத்து 2 ஆயிரத்து 489 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற் றில் இருந்து ஒரே நாளில் ஆயிரத்து 863 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 25 லட்சத்து 48 ஆயிரத்து 868 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந் தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்து 734 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் புதிதாக 172 பேருக்குத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த 204 பேர், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கோவையில் கடந்த 24 மணி நேரத்தில் 195 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் 143 பேருக்கும் தஞ்சாவூரில் 104 பேருக்கும் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.