அக்னிபாத் திட்டத்தில் சேர பல லட்சம் இளைஞர்கள் தயாராக உள்ளனர் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இந்திய சுதந்திர தினத்தின் 75-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் உள்ள மகாகவி சுப்பிரமணிய பாரதியார் மணிமண்டபத்தில் உள்ள பாரதியார் திருவுருவச் சிலைக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பாரதியார் மணிமண்டபத்தில் அங்கு தேசிய கொடி ஏற்றினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு பேசுகையில், 75வது சுதந்திர தினத்தை வெகுவிமரிசையாக கொண்டாட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்களின் வரலாற்றை இன்றைய இளைய சமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
எண்ணற்ற தியாகிகளை போற்றும் விதமாகவும், நமது தேசியக் கொடியின் அருமை மற்றும் புகழை, பெருமையை அறிந்து கொள்ளும் வகையில் அனைவரும் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்பது பிரதமரின் விருப்பம். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, குஜராத் முதல் அசாம் வரை என அனைத்து பகுதிகளிலும் தேசிய கொடி பட்டொளி வீசி பறக்கிறது. சுதந்திரப் போராட்ட வீரர்களை கொண்ட 75 மாவட்டங்கள் அடையாளப்படுத்தப்பட்டதில் தூத்துக்குடி மாவட்டமும் உண்டு. அது நமக்கு மேலும் பெருமை சேர்க்க கூடியதாக உள்ளது.
வெள்ளையனை விரட்டிய வீரம் தழுவிய பூமி நம்முடைய தூத்துக்குடி என்றும் , தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம்செயல்படுத்தப்பட்டு வருகிறது. 8 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஒவ்வொரு இல்லம் தோறும் தேசியக்கொடி ஏற்றி மக்கள் உள்ளம் தோறும், தேசிய சிந்தனையை மேலும் வலுப்படுத்த வேண்டும். இன்று இளைஞர்கள் ராணுவத்தில் இணைந்து பணியாற்றுவதற்காக அக்னிபாத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்துள்ளார். அக்னி பாத் திட்டத்தில் சேர பல லட்சம் இளைஞர்கள் தயாராக உள்ளனர் என்றார்.